கேரளாவில் இரண்டு வாரம் ஊரடங்கு: டாக்டர்கள் கோரிக்கை

பாலக்காடு: ‘கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இரண்டு வாரம் ஊரடங்கு அறிவிக்க வேண்டும்’ என, அரசு மருத்துவர்களின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கேரளா அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசுக்கு அனுப்பியுள்ள மனு:மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில், ஊழியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. கொரோனா என்பது மருத்துவ சிகிச்சை அமைப்புகளின் வரம்புக்கு மீறிய பெரும் சவாலாக உள்ளது. இரட்டை மரபணு மாறுபாடு பெற்ற பெருந்தொற்று, வேகமாக பரவி வருகிறது.

தற்போது பரிசோதனை செய்யும் நான்கு பேரில், ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்படுகிறது. பொது இடங்களில் மக்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் சங்கிலியை முறியடிக்க, குறைந்தபட்சம் இரு வாரங்களாவது ஊரடங்கு அத்தியாவசியம்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கேரளாவில் பொதுமுடக்கம் தேவையில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source : Dinamalar

(Visited 67 times, 1 visits today)

About The Author

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *